Followers
May 24, 2013
May 17, 2013
அழகு!
அத்தை மகலேன்று
அனுதாபம் கொள்ளவில்லை
உன்னை
அழகில்லாதவள் என்ற
தாழ்வுணர்சசி வாட்டுகிறதென்று
அறவணைக்க துடிக்கவில்லை .
இது
உன்னைப்பற்றி
என்
உள்ள உணர்வுகள் பற்றியும்
சில வரிகள் !
மிதமான மழைத்தூறலில் வந்து
வர்ணஜாலம் காட்டும்
வானவில்லைப்போல்
அழகும் ,
சற்று நேரத்தில் கலைத்து போகும் !
நரையும்
நடை தளர்வும்,
கன்னத்தின் சுருக்கமும்,
வரும்
கரு வளையத்தையும்
யாரால் தடுத்திட முடியும் !?
முதுமையில் பறிபோகும்
அழகை மட்டும் நேசிப்பவனுக்கு
சந்தோஷம்
மனைவியால் நிரந்தரமில்லை.
ஒரு பெண்ணின்
பரிசுத்தமான பாசமும்
பரிவும் அக்கறையுமே வாழ்க்கையை
அழகுபட ......
அலங்கரித்து செல்லும் !
புரிந்துக்கொள்
புற அழகை
புறம் தள்ளும்
நேர்மையான நேசத்திற்கு
இன்னொரு பெயர் காதல் !
என்
மின் மடலைக்கண்ட போது
என்னவளுக்கு
கொஞ்சமாவது தகர்ந்திருக்கும்
அழகில்லாதவள் என்ற
தாழ்வுணர்ச்சி !
Subscribe to:
Posts (Atom)