Followers

Aug 27, 2011

போலி குறுங்செய்திகள்

                 சில எஸ் எம் எஸ் வதந்திகளை பார்க்கும் போது ,மனித இதயங்கள் இற்று போய்விட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது ! முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் ஆட்சியில் இருந்த ஐந்தாண்டுகளில், அவர் இறந்துவிட்டதாக நான்கு முறை எஸ் எம் எஸ் வதந்தி பரவி ... தமிழகம் கடந்தும் பதட்டத்தை விதைத்திருக்கிறது ! 

              கடந்த சட்டமன்ற தேர்தலின்போது , தி மு க செய்த ஊழல் மற்றும் கலைஞர் குடும்ப ஆதிக்கத்தை பற்றிகேலியும் கிண்டலுமாய்  உலாவிய எஸ் எம் எஸ் சை படிக்காதவர்களே இல்லைஎன்று சொல்லலாம் .

                    கடந்த ஆட்சியில் , போலியோ சொட்டு மருந்து கொடுத்த ஒருநாள் , மூளை காய்ச்சல் நோயால் ஒரு குழந்தை இறந்துபோக ....'' இன்று போலியோ சொட்டு மருந்து சாப்பிட்ட குழந்தைகள் , தமிழகமெங்கும் கொத்து கொத்தாய் செத்து மடிகின்றன ''     என்ற கொடுரமான செய்தி எஸ் எம் எஸ் வழி பரவ .... சிங்கப்பூர் மலேசியாவில் இருக்கும் நம்மவர்களும் துடிதுடித்து போனார்கள் . அன்று சிங்கப்பூரில் விடுமுறை நாள் என்றதால் , லிட்டில் இந்தியா பகுதியில் கூடிய இந்திய ஊழியர்கள் தமிழக நிலைமையை சரிவர தெரிந்துகொள்ள  முடியாமல் , பைத்திய காரர்களைப்போல் ரோடுகளில் அலைந்தார்கள் . அப்போது  சிங்கப்பூர் தமிழ் வானொலி ஒலி96.8 தமிழக நிலவரத்தை திரு மாலனிடம் பேட்டிகண்டு ஒலிபரப்பி நம் ஊழியர்களின் பதட்டத்தை தனித்தது !

                  சிலநாட்களுக்கு முன் அப்துல் கலாம் கோவை மருத்துவமனை ஒன்றில் இறந்துவிட்டதாக எஸ் எம் எஸ் செய்தி பரவியது . 

           சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளி வந்துக்கொண்டிருந்த வேளையில் , ரஜினி இறந்துவிட்டதாக பரவிய எஸ் எம் எஸ் செய்திதான் , ரஜினியின் உடல் நலம் பற்றி லதா ரஜினிக்காந்தை வாய்திக்க வைத்தது .

            கந்த 24 ம் தேதி சிங்கப்பூரில் பரவிய ஒரு செய்திதான் எஸ் எம் எஸ் வதந்திகளை பரப்புவோருக்கு இதயம் இருக்கின்றதா என்ற கேள்வியை எழுப்புகின்றன   .
       அந்த எஸ் எம் எஸ் "ஆர்கே ஆர் ஸ்கூல் பஸ் ஆக்சிடென்ட் . கோவில்பட்டி பை பாஸ் ரோடு .30 l k g குழந்தைகள் சீரீஸ் பிளிஸ் பிரே பண்ணுங்கள்'' என்ற வாசகம் தாங்கிய எஸ் எம் எஸ் சிங்கப்பூரில் பரவியது ... 

             இது போன்ற கப்சா எஸ் எம் எஸ் சை யார் எழுதுவது ?

4 comments:

Muthuselvam said...
This comment has been removed by a blog administrator.
Muthuselvam said...

எழுதுவது பத்திரிக்கை சுதந்திரம் என்றால் அதற்கு கருதுறைப்பதும் சுதந்திரம் தான் . இது தங்கள் எனது பின்னுட்டத்தை இடம் நீக்கியதற்காக .

Muthuselvam said...

Press freedom is the freedom to write including our comments .please do not remove those comments

ஒதிகை மு.க.அழகிரிவேல் said...

நன்றி திரு முத்து, தொடர்ந்து உங்கள் ஆலோசனையை வழங்கி உதவுங்கள்.

Post a Comment