Followers

Aug 28, 2011

தமிழகம் முதலிடம் ....



                      உலகிலேயே சாலை விபத்துகளில் முதலிடம் வகிப்பது இந்தியாதான் . இந்தியாவில் நிகழும் விபத்துக்களில் பத்து சதவிகிதம் தமிழகத்தில் நடப்பது அதிர்சிகரமான சோகம் ! 


          2009 ம் ஆண்டில் இந்தியாவில் நடந்த நான்கு லட்சத்து இருபதாயிரம் சாலை விபத்துகளில் அறுபதாயிரத்து எழுநூற்று தொன்னூற்று நான்கு விபத்துக்கள் தமிழகத்தில் மட்டும் நடந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது .


               ஆசியாவில் , ஒரே சாலை விபத்தில் அதிக உயிர்களை பலிக்கொடுத்த அவலமும் தமிழகத்தில் நடந்துள்ளது. முன்பு "ஜெ" ஆட்சியின் போது, சென்னையிலிருந்து பெங்களூர் சென்றுக்கொண்டிருந்த  ஜெ ஜெ போக்குவரத்து கழக பேருந்தும், ஸ்ப்ரிட் ஏற்றி வந்த டேங்கர் லாரியும் , N H சாலையில் சுன்குவாசத்திரம் அருகே மோதிக்கொண்ட விபத்தின் போது திருமண கோஷ்டியை ஏற்றி வந்த டிராக்டரும் சேர்ந்து எரிந்ததில் 127 உயிர்கள் கரிக்கட்டையாகினர்  .

                   
               இந்த விபத்தின் கருகிய வாடை காற்றில் கலந்து மறைவதற்குள் , கோவை சூலூர் ஏர்போர்ட் அருகில் அரசு பேருந்தும் துவரம் பருப்பு ஏற்றி வந்த லாரியும் மோதி எரிந்ததில் பல உயிர்கள் பலியாகின  ,  அன்றே இந்த இரு விபத்துகளும் சாலை பயணத்தின் பாதுகாப்பு தன்மையை கேள்வி குறியாக்கியது .  


                அதன் பின் , சாலை விபத்துக்களை கட்டுபடுத்த அரசு பல புதிய  திட்டங்களைகொண்டுவரும் என்று எதிர்ப்பார்த்த மக்களுக்கு இன்றுவரை ஏமாற்றமே ! தமிழகம்   கடந்த ஆண்டு மட்டும் 13.700 உயிர்களை சாலைவிபத்தில் பலிக்கொடுத்திருக்கிறது . இது கடந்த பத்து ஆண்டுடன் ஒப்பிடுகையில் இரு மடங்கு அதிகமாம் ! 


                    அமைச்சர் மரியம் பிச்சை மரணத்திற்கு காரணமான வாகனத்தை அடையாளம் காணவே , தமிழக போலிஸ் பத்து தினங்கள் படாதபாடு பட்டுபோனதிலையே தெரிந்துபோனது அரசு  சாலையை கண்காணித்துவரும் லட்சணம் ! அதன்பின்னும் நிகழ்ந்த KBN பஸ் விபத்து முதல் தஞ்சை கீழ திருப்பந்துரித்தி வேன் விபத்து வரை பார்க்கும் போதும் சரி, இன்னும் போக்குவரத்து போலீசார் விழித்துகொண்டதாக தெரியவில்லை.


 ஆறரை கோடிமக்கள் இருந்த தமிழ்நாட்டில் அண்மைய கணக்கெடுப்பின்படி ஏழு கோடியே இருபது லட்சம் பேர் இருப்பதால்!? ... மக்கள் தொகையை கட்டுபடுத்தும் நோக்கில் அரசும் சாலை விபத்துகளை கண்டும் காணாமல் இருக்கின்றதோ ?

No comments:

Post a Comment