Followers

Sep 11, 2011

காதல்


பரத நாட்டியமாய் ....
பரவசப்படுத்தும் !
தெளிந்த நீரோடையாய் 
அமைதியில் ஆழ்த்தும் !

கொஞ்சும் தமிழாய் வந்து 
கவிதைகள் படிக்கும் !
குதூகல குழந்தையாய் மனம் 
மகிழ்ச்சியில் மிதக்கும் !

நேரம் கடப்பது 
நினைவுகளில் தப்பும் 
நினைவுகளும் சில நேரம் 
குழம்பியே கிடக்கும் !

பூட்ட நினைத்தால் 
எரிமலை வெடிக்கும் !
பொங்கி எழுந்து 
புயலாகவும் அடிக்கும் !

ஞானியை போல 
உறவையும் துறக்கும் !
உறக்கம் என்பதும் 
மறந்தே கிடக்கும் !

காதல் கைகோர்த்தால் 
கவலைகளை மறக்கும் !
காலம் பிரித்தால் 
உயிரையும் துறக்கும் !


25-12-2010 சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழில் இடம் பெற்ற எனது ஆக்கம்.

13 comments:

Unknown said...

கவிதை நல்லா இருக்கு தோழரே நன்றி!

rajamelaiyur said...

//
பூட்ட நினைத்தால்
எரிமலை வெடிக்கும் !
பொங்கி எழுந்து
புயலாகவும் அடிக்கும் !
//

அருமையான வரிகள்

ரெவெரி said...

நல்லாயிருந்தது...உங்கள் கவிதை...தொடருங்கள்...

ஒதிகை மு.க.அழகிரிவேல் said...

ஆதரவிற்கு நன்றி திரு விக்கி,ராஜபாட்டை&ரெவேரி

Unknown said...

தேனாய் இனிக்கும்-இது
தீந்தமிழ்ப் பாடல்
தானாய் பழுத்து-வந்து
தரைவீழ் கனீயே
ஆனாய் சுவைக்க-கவி
அழகிரி ஆக்க
மானாய் ஓடுது-தமிழ்
மயிலென ஆடுது
நன்று! நன்றி!

புலவர் சா இராமாநுசம்

மானாய்

ஒதிகை மு.க.அழகிரிவேல் said...

தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி ஐயா

SURYAJEEVA said...

அருமையான புரியும் வகையில் சொல்லாடல்.. நிறைய படியுங்கள்..

உதவாக்கரை said...

நன்றாக உள்ளது நண்பரே

ஒதிகை மு.க.அழகிரிவேல் said...

நன்றி சூர்யா,
நன்றி உதவாக்கரை
September 13, 2011 4:52

Muthuselvam said...

நான் இங்கே புதியவன் ,எனினும் எமை சில வார்த்தை சொல்ல அனுமதிக்க வேண்டும் . வாழ்கையில் நீண்டகாலம் பயணிக்காமல் இருக்கலாம் ஆனால் எது போன்ற வார்த்தைகளில் வருடி செல்வோர் வாழ்நாள் சாதனையள்ளராக ஆகக்கூடும் .கண்ணதாசன் வாலி போல் நீயும் !!!.

மாணிக்கம் said...

நன்றாக உள்ளது தோழரே ...............

ம.தி.சுதா said...

அருமையாக இருக்கிறது...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்

ஒதிகை மு.க.அழகிரிவேல் said...

மாணிக்கம் said...
நன்றாக உள்ளது தோழரே ...............

♔ம.தி.சுதா♔ said...
அருமையாக இருக்கிறது...


வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி நண்பர்களே...

Post a Comment