ஒட்டிய கன்னம்
ஒல்லி தேகம்
ஒட்டு துணி .....
மதிக்கும் படியாகயில்லை
தேகம் !
ஆனால் ,
உலகம் தலை வணங்குகிறது
மகாத்மாவை !
வெள்ளையுடை
வெளுத்த கூந்தல்
சுருங்கிய தோல்
அழகில்லா மேனி ....
ஆனால் ,
மயங்கி நின்றது மானுடம்
அன்னை தெரசாவின்
அன்புக்கு !
முரட்டு தலை
பிதுங்கிய விழி
எடுப்பான பல்
பயனற்ற செவி
முரடனின் தோற்றம்
ஆனால் ,
உலகம்
வியந்து நின்றது
தாமஸ் எடிசனிடம் !
புரிகிறது ....
அன்பும்
அறிவும்
அகிம்சையும்
இருந்தால்
இவ் வையமும்
நம் வசம் !
2-01-2011 சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழில் இடம் பெற்ற எனது ஆக்கம்
6 comments:
உண்மைதான்...
அதனால் தான் அவர்கள் இன்றும் வாழ்கிறார்கள்...
அர்த்தமுள்ள கவிதை
வாழ்த்துக்கள்...
kavithai super
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு கவிதை வீதி சௌந்தர்
arumaiyaana varikal
my dear friend
sambathkumar
நன்றி நண்பரே...
Post a Comment