Followers

Sep 9, 2011

வையகமும் வசப்படும்



                   

ஒட்டிய கன்னம் 
ஒல்லி தேகம் 
ஒட்டு துணி .....
மதிக்கும் படியாகயில்லை 
தேகம் !  
ஆனால் ,
உலகம் தலை வணங்குகிறது 
மகாத்மாவை !

வெள்ளையுடை 
வெளுத்த கூந்தல் 
சுருங்கிய தோல்
அழகில்லா மேனி ....
ஆனால் ,
மயங்கி நின்றது மானுடம் 
அன்னை தெரசாவின் 
அன்புக்கு !

முரட்டு தலை 
பிதுங்கிய விழி 
எடுப்பான பல் 
பயனற்ற செவி 
முரடனின் தோற்றம்
ஆனால் ,
உலகம் 
வியந்து நின்றது 
தாமஸ் எடிசனிடம் !

புரிகிறது ....
அன்பும் 
அறிவும் 
அகிம்சையும் 
இருந்தால்
இவ் வையமும் 
நம் வசம் !  

 2-01-2011 சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழில் இடம் பெற்ற எனது ஆக்கம்

6 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

உண்மைதான்...

அதனால் தான் அவர்கள் இன்றும் வாழ்கிறார்கள்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அர்த்தமுள்ள கவிதை
வாழ்த்துக்கள்...

Anonymous said...

kavithai super

ஒதிகை மு.க.அழகிரிவேல் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு கவிதை வீதி சௌந்தர்

சம்பத்குமார் said...

arumaiyaana varikal

my dear friend

sambathkumar

ஒதிகை மு.க.அழகிரிவேல் said...

நன்றி நண்பரே...

Post a Comment